BK Murli 15 February 2018 Tamil

bk murli today

Posted by: BK Prerana

BK Prerana is executive editor at bkmurlis.net and covers daily updates from Brahma Kumaris Spiritual University. Prerana updates murlis in English and Hindi everyday.
Twitter: @bkprerana | Facebook: @bkkumarisprerana
Share:






    BK Murli 15 February 2018 Tamil


    15.02.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


    இனிமையான குழந்தைகளே! எல்லையற்ற படைப்பின் சேவை செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார், நரகத்தை சொர்க்கமாக ஆக்கும் இந்த சேவை கல்ப கல்பமாக தந்தை மட்டுமே செய்கின்றார்.



    கேள்வி:

    சங்கமயுகத்தின் எந்த ஒரு வழக்கமானது முழு கல்பத்திலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாகும்?

    பதில்:

    முழு கல்பத்திலும் குழந்தைகள் தந்தைக்கு நமஸ்தே செய்கின்றனர், ஆனால் சங்கம யுகத்தில் தந்தை குழந்தைகளுக்கு நமஸ்தே செய்கின்றார். செல்லக் குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் வந்திருக்கின்றேன் எனில் குழந்தைகளாகிய நீங்கள் பெரியவர்களாக ஆகி விட்டீர் களல்லவா? என்று தந்தை கூறுகின்றார். தந்தை கல்பத்திற்குப் பிறகு முழு உலத்திலுள்ள குப்பையை தூய்மையாக்கி நரகத்தைச் சொர்க்கமாக்குவதற்காக குழந்தைகளிடத்தில் வருகின்றார். தந்தையைப் போன்று நிராகாரி, நிர்அகங்காரி வேறு யாரும் இருக்க முடியாது. தந்தை தனது களைப்படைந்த குழந்தைகளுக்கு கால்களை அமுக்கி விடுகின்றார்.



    ஓம்சாந்தி.

    வந்தவுடனேயே முதன் முதலாக தந்தை குழந்தைகளுக்கு நமஸ்தே கூற வேண்டுமா? அல்லது குழந்தைகள் தந்தைக்கு நமஸ்தே கூற வேண்டுமா? (குழந்தைகள் தந்தைக்கு நமஸ்தே கூற வேண்டும்). இல்லை, முதலில் தந்தை நமஸ்தே கூற வேண்டும். சங்கம யுகத்தின் வழக்கங்களே அனைத்தையும் விட தனிப்பட்டதாகும். நான் உங்கள் அனைவருக்கும் தந்தையாக இருந்து உங்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கின்றேன் என்று சுயம் தந்தை கூறுகின்றார். ஆக கண்டிப்பாக குழந்தைகள் உயர்ந்தவர்களல்லவா! உலகத்தில் குழந்தைகள் தந்தைக்கு நமஸ்தே கூறுவார்கள். இங்கு குழந்தைகளுக்கு தந்தை நமஸ்தே கூறுகின்றார். நிராகாரி, நிர்அகங்காரி என்று பாடப்பட்டிருக்கின்றது எனில் அதனையும் காண்பிக்க வேண்டுமல்லவா! அவர்கள் சந்நியாசிகளின் சரணங்களில் (பாதங்களில்) தலை வணங்குகின்றனர். சரணங்களைக் கழுவி நீரைக் குடிக்கின்றனர். எதையும் புரிந்து கொள்வதில்லை. கல்பத்திற்குப் பிறகு குழந்தைகளைச் சந்திப்பதற்காகவே தந்தை வருகின்றார். மிகவும் செல்லக் குழந்தைகளாக இருக்கின்றீர்கள், ஆகையால் பாபா கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! களைப்படைந்து விட்டீர்கள். திரௌபதி கால்களை அமுக்கி விட்டாரெனில் வேலைக்காரர் ஆகி விட்டாரல்லவா! வந்தே மாதரம் என்று கூறியது யார்? தந்தை. முழு உலகிற்கும் எல்லையற்ற சேவை செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கின்றீர்கள். உலகில் அசுத்தங்கள் அதிகமாக உள்ளன. இது நரகமாக இருப்பதால் நரகத்தைச் சொர்க்க மாக்குவதற்காக மிகவும் அன்புடன், ஆர்வத்துடன் தந்தை வர வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் சேவைக்காக நான் வர வேண்டுமென்பதை அறிந்திருக்கின்றார். கல்ப கல்பமாக சேவைக்கு வர வேண்டியிருக் கின்றது. அவர் சுயம் வரும்பொழுது தான் தந்தை நமக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். இங்கு அமர்ந்திருந்தாலும் அனைவருக்கும் சேவை ஆகிவிடுகின்றது. அனைவரிடத்திலும் செல்ல வேண்டுமென்பது கிடையாது. சர்வவியாபி என்பதன் பொருளும் அறிந்திருக்கவில்லை. முழு உலகிற்கும் நன்மை செய்யும் வள்ளல் ஒரே ஒரு தந்தையல்லவா! அவரை ஒப்பிடும் பொழுது மனிதர்கள் எந்த சேவையும் செய்ய முடியாது. அவரது சேவை எல்லையற்ற சேவையாகும்.



    பாட்டு:

    விழித்தெழுங்கள், நாயகிகளே! விழித்தெழுங்கள் ......

    ஓம் சாந்தி.

    பாருங்கள், எவ்வளவு நல்ல பாட்டு! புது யுகம் மற்றும் பழைய யுகம் ... என்று யுகங்களைப் பற்றியும் புரிய வைக்க வேண்டும். யுகமென்பது பாரதவாசிகளுக்கு மட்டுமே. பாரதவாசிகளின் மூலம் சத்யுகம், திரேதாயுகம் இருந்தது என்பதை அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் துவாபர யுகத்தில் வருகின்றனர். பாரதம் பழைய கண்டமாக இருந்தது, அதில் தேவி தேவதைகள் இராஜ்யம் செய்தனர் என்பதை மற்றவர்கள் மூலமாகவே கேட்கின்றனர். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, இப்பொழுது இல்லை. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, விஷ்ணுவின் மூலம் பாலனை செய்விக்கின்றார் என்று பாடப்பட்டிருக்கின்றது. செய்வதில்லை, செய்விக்கின்றார். ஆக இது அவரது மகிமையாகும். உண்மையில் அவர் முதல் படைப்பை சூட்சம வதனத்தில் படைக்க வேண்டும், ஏனெனில் படைக்கக் கூடியவர். கீதையைப் பற்றி கூறும் பொழுது அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக விளங்கக் கூடியது பகவத் கீதை என்று கூறு கின்றனர். ஆனால் பகவானின் பெயரை அறிந்திருக்கவில்லை. எந்த பகவான்? வியாசரைப் போன்று சாஸ்திரங்களை உருவாக்கக் கூடியவர்கள் கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டனர். கீதை என்பது தேவி தேவதா தர்மத்தின் தாய், தந்தையாக இருக்கின்றது. மற்ற அனைத்தும் பின் நாட்களில் வந்ததாகும். ஆக இது பழமையானதாக ஆகி விட்டது. நல்லது, பகவான் கீதையை எப்பொழுது கூறினார்? கண்டிப்பாக அனைத்து தர்மமும் இருந்திருக்க வேண்டும். உண்மையில் அனைத்து தர்மத்தினருக்கும் கீதை தான் முக்கிய மானதாகும். அனைத்து தர்மத்தினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் எங்கே ஏற்றுக் கொள்கின்றனர்? முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மிகவும் கடுமையானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது தர்ம சாஸ்திரத்தை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர். கீதை பழமை யானது என்று தெரியும் பொழுது வரவழைக்கின்றனர். பகவான் எப்பொழுது கீதையைக் கூறினார்? என்பதை அறிந்திருக்கவில்லை. கிறிஸ்துவிற்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு கீதையின் பகவான் கீதையை கூறினார் என்று சின்மயானந்தர் கூறுகின்றார். 3500 ஆண்டு களுக்கு முன்பு இந்த தர்மங்கள் இல்லவே இல்லை. பிறகு அனைத்து தர்மத்திற்கும் இது சாஸ்திரமாக எப்படி ஆக முடியும்? இந்த நேரத்தில் அனைத்து தர்மங்களும் உள்ளன. அனைத்து தர்மங்களின் கீதையின் மூலமாக சத்கதி செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். தந்தையினால் கூறப்பட்டது கீதையாகும். அதில் தந்தைக்குப் பதிலாக குழந்தையின் பெயரைப் போட்டுக் கடினமானதாக (குழப்பம்) ஆக்கிவிட்டார்கள். இதன் மூலம் சிவராத்திரி எப்பொழுது கொண்டாடுவது? என்பது நிரூபணம் ஆவதில்லை. சிவஜெயந்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஏறக்குறைய ஏற்பட்டு விடுகின்றது. சிவஜெயந்தி முடிந்த பின்பு கிருஷ்ணரின் பிறப்பு ஏற்படுகின்றது. கிருஷ்ணரின் ஞான யக்ஞம் என்று ஒருபொழுதும் பாடப்படுவதில்லை. ருத்ர ஞான யக்ஞம் என்று பாடப்படுகின்றது. அதன் மூலமாகவே விநாச நெருப்பானது கொழுந்து விட்டு எரிந்தது. அதனை இப்பொழுது கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆதி சநாதன தேவி தேவதா தர்மமானது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. பிறகு மற்ற தர்மங்கள் இருக்காது. பிற தர்மங்கள் இல்லாத பொழுது தான் கிருஷ்ணரும் வருகின்றார். இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமல்லவா? சத்யுகத்தில் சூரியவம்ச தேவி தேவதா இராஜ்யம் இருக்கும் பொழுது கண்டிப்பாக மிகக் குறைந்த மனிதர்களே இருப்பார்கள். மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்தி தாமத்தில் இருப்பார்கள். பகவானோடு அனைவரும் சந்திக்க வேண்டுமல்லவா? தந்தைக்கு சலாம் (வணக்கம்) என்று சொல்வார்களல்லவா? தந்தையும் மீண்டும் வந்து குழந்தைகளுக்கு சலாம் செய்கின்றார். குழந்தைகள் பிறகு தந்தைக்குச் செய்கின்றனர். இந்த நேரத்தில் தந்தை சைத்தன்ய ரூபத்தில் வந்திருக்கின்றார். பிறகு அங்கே அனைத்து ஆத்மாக்களும் கண்டிப்பாக சந்திப்பார்கள். அனைவரும் பகவானை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். எங்கு சந்திப்பார்கள்? இங்கு சந்திக்க முடியாது. ஏனெனில் கோடியில் சிலர், அந்தச் சிலரிலும் சிலரே வருவார்கள். ஆக அனைத்து பக்தர்களும் எப்பொழுது மற்றும் எங்கு சந்திப்பார்கள்? எங்கிருந்து தந்தையைப் பிரிந்து வந்தார்களோ அங்கேயே சென்று சந்திப்பார்கள். பகவானின் இருப்பிடமே பரந்தாமம் ஆகும். நான் அனைத்து குழந்தைகளையும் துக்கத்திலிருந்து விடுவித்து பரந்தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இந்த காரியம் அவர் ஒருவருடையது மட்டுமே. இப்பொழுது அநேக மொழிகள் உள்ளன. ஒரு வேளை சமஸ்கிருத மொழியில் ஆரம்பித்தால் இவர்கள் அனைவரும் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? இன்றைய நாட்களில் கீதையை சமஸ்கிருதத்தில் மனப்பாடம் செய்ய வைத்து விடுகின்றனர். சமஸ்கிருதத்தில் மிக நன்றாகப் பாட்டைப் பாடுகின்றனர். அபலைகள், பெண்கள் சமஸ்கிருதத்தை அறிந்திருக்க மாட்டார்கள். ஹிந்தி மொழியானது பொதுவான தாகும். ஹிந்திக்கான பிரச்சாரம் அதிகமாக இருக்கின்றது.. பகவானும் ஹிந்தியில் தான் கூறிக் கொண்டிருக்கின்றார். அவர்கள் கீதையின் அத்தியாயத்தைக் கூறுகின்றனர், இதனை அத்தியாயமாக எப்படி உருவாக்க முடியும்? ஆரம்பத்திருந்து இந்த முரளியானது நடைபெற்று வருகின்றது. தூய்மை இல்லாத உலகை தூய்மையாக்குவதற்காக தந்தை வந்தே ஆக வேண்டும். கண்டிப்பாக சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வார். நரகத்தைப் படைக்க மாட்டார். நரகத்தை இராவணன் ஸ்தாபனை செய்கின்றார். சொர்க்க ஸ்தாபனையை தந்தை செய்கின்றார், அவரது பெயர் சிவன். சிவன் என்றால் பிந்து. ஆத்மாவும் புள்ளியல்லவா! நட்சத்திரம் எவ்வாறு இருக்கின்றது? எவ்வளவு சிறியதாக இருக்கின்றது? ஆத்மாக்கள் மேலே செல்லும் பொழுது பெரியதாக ஆகி விடாது. இதற்காக பிருகுட்டியின் நடுவில் அடையாளமாகக் காண்பிக்கின்றனர். பிருகுட்டியின் நடுவில் நட்சத்திரத்தைப் போன்று ஜொலிப்பதாகக் கூறுகின்றனர். ஆக பிருகுட்டியில் மிகச் சிறிய ஆத்மா மட்டுமே இருக்க முடியும். ஆக ஆத்மா எப்படியிருக்கின்றதோ அதே போன்று தான் பரமாத்மாவும் இருக்கின்றார். ஆனால் அதிசயம் என்னù வனில் இவ் வளவு ஒவ்ù வாருவரின் சிறிய ஆத் மாவில் அனைத்து பிற ப்புகளின் பாகம் நிறைந்திருப்பதாகும். அது ஒருபொழுதும் தேய்ந்து போவது கிடையாது. எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.எவ்வளவு ஆழமான விசயமாகும்! முன்பு எப்பொழுதாவது இந்த விஷயங்களைக் கேட்டிருக்கின்றீர்களா என்ன? லிங்க உருவில் இருப்பதாகவும், கட்டை விரல் போன்று இருப்பதாகவும் முன்பு கூறிவந்தார். முதலிலேயே ஒருவேளை இந்த விஷயங்களைக் கூறியிருந்தால் நீங்கள் புரிந்து கொண்டிருக்க முடியாது. இப்பொழுது புத்தியில் அமர்ந்திருக்கின்றது. நட்சத்திரம் என்று அனைவரும் கூறுவர். நட்சத்திரம் சாட்சாத்காரமாக ஏற்படுகின்றது. உங்களுக்கு எந்த சாட்சாத்காரம் தேவை? புது உலகம். தந்தை புது உலகம் சொர்க்கத்தை உருவாக்குகின்றார். அவரே அனைவரையும் அனுப்பி விடுவார். சுயம் ஒரே ஒரு முறை வருகின்றார். இப்பொழுது மனிதர்கள் அமைதி கேட்கின்றனர். ஏனெனில் அனைவரும் சாந்தியிலேயே செல்லக் கூடியவர்கள். சுகம் காக்கை எச்சத்திற்குச் சமமானது என்று கூறுகின்றனர். இராஜயோகத்தைப் பற்றி கீதையிலும் உள்ளது, அதன் மூலம் ராஜாவிற்கெல்லாம் ராஜாவாக ஆகின்றனர். சுகம் காக்கை எச்சத்திற்குச் சமமானது என்று கூறக் கூடியவர்கள் இராஜ்யத்தை எவ்வாறு அடைய முடியும்? இது இல்லற மார்க்கத்திற்கான விஷயமாகும். சந்நியாசிகளால் கீதையைக் கூட எடுத்துக் கொள்ள முடியாது. சந்நியாசம் இரண்டு ரூபத்தில் இருப்பதாக தந்தை கூறுகின்றார். சந்நியாசிகளிலும் இரண்டு வகைகள் உள்ளனர். இங்கு ஒரே வகையான சந்நியாசம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் பழைய உலகை சந்நியாசம் செய்கின்றீர்கள். குடும்பத்தில் இருந்தாலும் தாமரை மலரைப் போன்று இருக்க வேண்டும்.  எவ்வாறு இருப்பது என்பதை இவர்களிடத்தில் கேளுங்கள். அதிகமானவர்கள் இவ்வாறு இருக்கின்றனர். சந்நியாசிகளின் காரியம் இது கிடையாது. இல்லையெனில் அவர்கள் ஏன் வீடு வாசலை விட வேண்டும்? தானம் என்பது முதலில் தனது வீட்டிருந்து ஆரம்பிக்க வேண்டும். முதன் முதல் மனைவிக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். முதன் முதல் நானும் எனது மனைவிக்கு (சாகார பிரம்மா) கற்றுக் கொடுக்கின்றேன் என்று சிவபாபா கூறுகின்றார். தானம் வீட்டிருந்து ஆரம்பிக்க வேண்டும். சிவபாபாவின் சைத்தன்ய வீடு இதுவாகும். முதன் முதல் இந்த மனைவி கற்றுக் கொள்கின்றார், பிறகு அவர் மூலமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் வரிசைக்கிரமமாகக் கற்றுக் கொள்கின்றனர். இது மிகவும் ஆழமான விஷயமாகும். அனைத்து சாஸ்திரங்களிலும் முக்கியமான சாஸ்திரம் கீதையாகும். ஆனால் கீதை சாஸ்திரத்தின் மூலமாக யாரும் தூண்டுதல் கொடுப்பது கிடையாது. அவர் இங்கு வருகின்றார், நினைவுச் சின்னங்களும் இருக்கின்றது. சிவன் கோயில்கள் அதிகமாக உள்ளன. நான் சாதாரண பிரம்மாவின் உடலில் வருகின்றேன் என்று சுயம் கூறுகின்றார். இவர் தனது பிறப்புகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஒருவருக்கான விஷயம் மட்டுமல்ல. அனைத்து பிரம்மா முக வம்சத்தினர்களும் அமர்ந்திருக்கின்றீர்கள். இந்த ஒருவருக்கு மட்டும் தந்தை புரிய வைப்பது கிடையாது. பிரம்மாவின் வாயின் மூலமாக பிராமணர்களாகிய நீங்கள் படைக்கப்பட்டிருக்கின்றீர்களெனில் அனைத்து பிராமணர்களுக்கும் புரிய வைக்கின்றார். யாகமானது எப்பொழுதும் பிராமணர்களின் மூலமாகவே நடைபெறும். அந்த கீதையை கூறுபவர் களிடத்தில் பிராமணர்கள் இல்லாத காரணத்தினால் அதனை யாகம் என்று கூற முடியாது. இது மிகப் பெரிய யாகமாகும். எல்லையற்ற தந்தையின் எல்லையற்ற யாகமாகும். எப்பொழுதிலிருந்து யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது? இப்பொழுது வரைக்கும் பண்டாரா (பண்டகசாலை) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எப்பொழுது சமாப்தி யடையும்? முழு இராஜ்யமும் ஸ்தாபனையாகும் பொழுது. உங்களை திரும்பவும் அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். பிறகு வரிசைக்கிரமமாக பாகத்தை நடிப்பதற்காக அனுப்பி வைத்து விடுவேன். நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றேன், உங்களை அழைத்துச் செல்வேன் என்று வேறு யாரும் கூற முடியாது. தூய்மை இல்லாதிருக்கும் மனிதர்கள் அனைவரையும் தூய்மையாக்கி அழைத்துச் செல்வேன். பிறகு அவரவர் தர்மத்தை ஸ்தாபனை செய்யும் நேரத்தில் தூய்மையான ஆத்மாக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுது அநேக தர்மங்கள் உள்ளன. மற்றபடி ஒரு தர்மம் இப்பொழுது இல்லை. பிறகு அரைக் கல்பத்திற்கு வேறு எந்த சாஸ்திரங்களும் இருக்காது. ஆக கீதை என்பது அனைத்து தர்மத்தின், அனைத்து சாஸ்திரங்களின் சிரோண்மணியாக இருக்கின்றது. ஏனெனில் இதன் மூலமாகவே அனைவருக்கும் கதி, சத்கதி கிடைக்கின்றது. சத்கதி என்பது பாரதவாசிகளுக்கும், மற்றவர்கள் அனைவருக்கும் கதி (ஆத்மலோக வாசம்) கிடைக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பாரதவாசிகளிலும் யார் முதன் முதலில் பரந்தாமத்திருந்து வந்தார்களோ அவர்களே முதலில் ஞானத்தை அடைவார்கள். அவர்களே முதன் முதலில் செல்லவும் ஆரம்பிப்பார்கள். வரிசைக்கிரமமாக அனைவரும் வந்தே ஆக வேண்டும். சதோ, ரஜோ மற்றும் தமோ நிலையை அனைவரும் கடந்தே ஆக வேண்டும். இப்பொழுது கல்பத்தின் ஆயுள் முடிவடைந்து விட்டது. அனைத்து ஆத்மாக்களும் ஆஜாராகி விட்டனர். தந்தையும் வந்து விட்டார். ஒவ்வொருவரும் தங்களது பாகத்தை நடித்தே ஆக வேண்டும். நாடகத்தில் அனைத்து நடிகர்களும் ஒன்றாக வருவதில்லை. தங்களது நேரத்தில் வருவார்கள். வரிசைக் கிரமமாக எவ்வாறு வருகின்றீர்கள் என்பதை தந்தை புரிய வைத்திருக்கின்றார். வர்ணங்களின் ரகசியங்களையும் புரிய வைத்திருக்கின்றார். குடுமி பிராமணர்களினுடையதாகும். ஆனால் பிராமணர்களையும் படைக்கக் கூடியவர் யார்? சூத்திரர்கள் படைக்க முடியாதல்லவா! குடுமிக்கும் மேலே பிராமணர்களின் தந்தை பிரம்மா. பிரம்மாவின் தந்தையாக சிவபாபா இருக்கின்றார். ஆக நீங்கள் சிவ வம்சத்தினர்கள், பிரம்மாவின் முகவம்சத்தினர்களாக (வாய்வழி ஞானம் கேட்டு) இருக்கின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் மீண்டும் தேவதை களாக ஆவீர்கள். வர்ணங்களின் கணக்குகளைப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழியும் கொடுக்கப்படுகின்றது. அனைவரும் ஒரே மாதிரி புத்திசாலிகளாக கிடையாது என்பதை அறிந்திருக்கின்றீர்கள். புதியவர்கள் முன்பு வித்வான்கள், பண்டிதர்கள் போன்றவர்கள் விவாதம் செய்தால் அவர்களால் புரிய வைக்க முடியாது. நான் புதியவன், குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் என்னை விடப் பெரியவர்கள் உங்களுக்கு புரிய வைப்பார்கள், என்னை விட வேகமானவர்கள் என்று கூற வேண்டும். வகுப்பில் வரிசைக்கிரமம் இருக்குமல்லவா! தேகாபிமானத்தில் வரக் கூடாது. இல்லையெனில் மானம் போய் விடும். பி.கு.வினால் முழுமையாகப் புரிய வைக்க முடியவில்லை என்று கூறிவிடுவர். ஆகையால் தேகாபிமானத்தை விட்டு விட்டு மற்றவர்களிடத்தில் குறிப்பிட்டுக் கூற வேண்டும். நான் மேலே இருப்பவரிடத்தில் கேட்கின்றேன் என்று பாபாவும் கூறினாரல்லவா! பண்டிதர்கள் தலையை (புத்தியை) மிகவும் கெடுத்து விடுகின்றனர். ஆகையால் அவர்களிடத்தில் நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கின்றேன், மன்னித்துக் கொள்ளுங்கள், நாளை வந்தால் நமது மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்குப் புரிய வைப்பார்கள் என்று கூற வேண்டும். மகாரதி, குதிரைப்படை, காலாட்படை இருக்கின்றதல்லவா! சிலர் சிங்கத்தின் மீதும் சவாரி செய்கின்றனர். சிங்கம் அனைத்தையும் விட வேகமானதாகும். காட்டில் தனியாக இருக்கும். யானை எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும். தனியாக இருந்தால் யாராவது அடித்து விடுவார்கள். சிங்கம் வேகமாக இருக்கும். சக்திகளும் சிங்கத்தின் மீது சவாரி செய்கின்றனர்.



    உங்களது சத்சங்கமும் வெளியில் (அயல்நாடுகளுக்கு) செல்லும். ஆனால் காரியத்தை முதலில் முடித்துக் கொடுக்க (ஆரம்பிப்பது) ஏற்பது யார்? என்பதை பாபா பார்க்கின்றார். பழமையான தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார்? என்பதை நிரூபணம் செய்து கூற வேண்டும். அநேகர் கடவுள் - தேவி என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரன் தனிப்பட்டவர், கடவுள் - தேவி தனிப்பட்டவர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். லெட்சுமி, நாராயணனை பகவான், பகவதி என்று கூறுகின்றனர். ஆனால் இது சட்டத்திற்கு விரோதமானதாகும். அவர்கள் தேவி, தேவதைகளாக இருக்கின்றனர். ஒருவேளை லெட்சுமி, நாராயணனை பகவான், பகவதி என்று கூறினால் பிரம்மா, விஷ்ணு, சங்கரை முதலில் பகவான் என்று கூற வேண்டியிருக்கும். அறிவும் வேண்டும். நல்லது.



    இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.



    தாரணைக்கான முக்கிய சாரம்:

    1) தேகாபிமானத்தை விட்டு தன்னை விட பெரியவர்களை முன்னால் வைக்க வேண்டும். பாப்சமான் நிர்அகங்காரி ஆக வேண்டும்.



    2) தானத்தை முதலில் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ..... முதலில் தனது குடும்ப வாழ்க்கையை தாமரை மலர் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்தாலும் புத்தியின் மூலமாக பழைய உலகை சந்நியாசம் செய்ய வேண்டும்.



    வரதானம் :

    மூன்று காலத்தையும், மூன்று லோகத்தையும் பற்றிய ஞானத்தை தாரணை செய்து அறிவுள்ளவர் ஆகி தடைகளை தகர்ப்பவர் ஆகுக !



    யார் மூன்று காலங்கள், மூன்று லோகங்கள் பற்றி அறிந்த ஞானம் நிறைந்தவரோ அவரைத்தான் அறிவாளி அதாவது கணேஷ் என கூறப்படுகிறார். கணேஷ் என்றால் தடைகளை வினாசம் செய்பவர். அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் தடை ஏற்படுத்துபவர் ஆக மாட்டார். ஒருவேளை யாராவது தடை ரூபமாக ஆனாலும் கூட நீங்கள் அந்த தடைகளை அழிப்பவர் ஆகி விடுங்கள், இதனால் தடை இல்லாமல் முடிந்து போய் விடும். தடைகளை அழிக்கக் கூடிய ஆத்மாக்கள் சூழ்நிலை, வாயு மண்டலத்தையும் கூட மாற்றம் செய்து விட முடியும், அவற்றை வர்ணனை செய்ய மாட்டார்கள்.



    சுலோகன் :

    தன்னுடைய நடத்தை மற்றும் முகத் தோற்றத்தில் சத்தியத் தன்மையின் பணிவுத் தன்மையை அனுவம் செய்விப்பது தான் மிக சிறப்பு தன்மையாகும்.




    ***OM SHANTI***

    No comments

    Say Om Shanti to all BKs